• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • இரணைமடுவில் நேற்றிரவு விபத்து – இளைஞர் உயிரிழப்பு

இரணைமடுவில் நேற்றிரவு விபத்து – இளைஞர் உயிரிழப்பு

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரணைமடு பகுதியிலிருந்து A9 வீதி நோக்கி பயணித்த ஐஸ்கிறீம் வண்டியுடன் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில்…

எரிபொருள் தட்டுப்பாடு – இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குரவத்து சங்கம் கோரிக்கை

தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்காவிட்டால் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக்கொள்வோம் என இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குரவத்து சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாணவர் போக்கவருத்து சேவை சங்கத்தின் தலைவர் குறிப்பிடுகையில், மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச்செல்ல பாடசாலை சேவையை மேற்கொள்ளும் வாகனங்களுக்கு…

கொடிகாமத்தில் டெங்கு காய்ச்சல். குழந்தை உயிரிழப்பு

யாழ். கொடிகாமம், மீசாலை வடக்குப் பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக வாகீசன் விதுசன் என்ற ஒரு வயது 5 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கடந்த 6 நாட்களாக காய்ச்சல் காரணமாக குழந்தைக்கு ஆயுள்வேத வைத்தியம் செய்தபின் நேற்று பிற்பகல்…

நாளையும் தினமும் இருக்கு மின்வெட்டு 

நாளையதினமும் (07) சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. “இதன்படி, E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில்…

இலங்கையிலிருந்து வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைது

இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வந்த பெண் பயணியொருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவின் அதிகாரிகள், கொழும்பில் இருந்து வந்த ஒரு பயணியை இரகசிய தகவலின் அடிப்படையில் தடுத்து…

யாழ்.வட்டுக்கோட்டையில் பாரிய விபத்து: 2 இளைஞர்கள் படுகாயம்!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு சனிக்கிழமை (05-03-2022) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து கார் ஒன்றினை முந்திச் சென்றவேளை எதிரே வந்த பேருந்துவுடன்…

யாழில் சில வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலை.

யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இச் சந்திப்பானது பிறீமா மா விற்பனை முகவர்களுடனும், வடக்கிற்கான பிறீமா மா விநியோகஸ்தருடனும் இடம்பெற்றது.…

வவுனியா விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபமாக பலி!

வவுனியா குருக்கள்புதுக்குளம்பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வவுனியா குருக்கள்புதுக்குளம் பகுதியில் மன்னார் – பறயணாலங்குளம் பிரதான வீதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார்…

நெல்லியடியில் வீதியில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி

வடமராட்சி , நெல்லியடியில் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மயக்கத்திற்கு காரணம் தெரியாமையினால் உடனடியாக சிறுமி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இரத்தக் கறையுடன் வீதியோரம் சடலம்

யாழ்ப்பாணத்தில் இரத்தக் கறையுடன் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை பருத்தித்துறை வீதியில், பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே நபர் ஒருவரின் சடலம் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணப்படும் உடலம் அருகே ஓர் மோட்டார் சைக்கிளும் காணப்படுவதனால்…

கோப்பாய் இராச வீதி விபத்தில் விரிவுரையாளர் பலி

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன் இன்றிரவு இடம் பெற்ற விபத்தில் உயிரழந்தார். கோப்பாய் இராச வீதி கிருஷ்ணன் கோவில் சந்தியில் இன்று 03.03.2022 இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் உயிரிழந்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed