• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தனியாக இருந்த வயோதிப பெண்ணை தாக்கி கொள்ளை

Okt 17, 2022

யாழில் வயோதிப பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருக்கும்போது வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் அப்பெண்ணை தாக்கி கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.சாவகச்சோி – மீசாலை ஐயா கடை சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல், மூதாட்டியின் கன்னத்தில் அறைந்து, வீட்டில் இருந்த பத்தரை பவுன் நகை மற்றும் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது.

முகமூடி மற்றும் கையுறை அணிந்து வீட்டிற்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல் மேற்படி துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed