• Mo.. Apr. 28th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாய் கடித்ததை குடும்பத்தினரிடம் மறைத்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்

Apr. 28, 2025

 வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டு காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழு வயது பாடசாலை மாணவன் இன்று (27)உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவர் கடந்த 24 ஆம் திகதி சுகவீனம் காரணமாக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

 கடந்த மாதம், வீட்டில் இருந்த ஒரு வளர்ப்பு நாய் மாணவனின் பிறப்புறுப்பைக் கடித்தது, இதனை மாணவர் குடும்பத்தினரிடம் சொல்லாமல் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகக் கூறினார்.

பின்னர், தண்ணீர் மற்றும் காற்றின் பயம் காரணமாக மாணவனின் அறிகுறிகள் மோசமடைந்ததால், மாணவன் சிகிச்சைக்காக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed