• Fr.. März 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்கட்டண குறைப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு 

März 14, 2025

மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்று (14.03.2024) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

 இதன்போது, அரசாங்கம் வழக்கமாக ஒரு வருடம் முழுவதும் நிலக்கரியை இருப்பில் வைத்திருக்க உத்தரவிடுவதால், நிலக்கரி செலவுக் குறைப்பின் பலனை யாராலும் கடந்து செல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.

எனவே, ஒரு வருடத்திற்குள் ஏற்படும் நிலக்கரி விலை ஏற்ற – இறக்கங்களுக்கு ஏற்ப மின் கட்டணங்களை நாங்கள் சரிசெய்ய முடியாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed