• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மாணவியின் உயிரை குடித்த நிமோனியா காய்ச்சல்

Okt 13, 2024

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குளுவினமடு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி , செல்வி. அ.வர்ஷாயினி ( 13 வயது) நிமோனியாக்காச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இன்றைய இராசிபலன்கள் (13.10.2024)

குறித்த மாணவி மட் /மமே /கொல்லநுல்லை விவேகானந்த வித்தியாலயத்தில் 8 ம் தரத்தில் பயின்று வந்தவராவார்.

வீதியில் முந்திச் செல்ல விடவில்லை! யாழ் நகரில் பட்டப்பகலில் தாக்கப்ட்ட நபர்

கல்வி நடவடிக்கைகள் மாத்திரமன்றி விளையாட்டிலும் ஈடுபாடுடையவராக காணப்பட்ட இம் மாணவி இவ் வருடம் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய அளவிலான கராத்தே போட்டியொன்றில் பதக்கம் வென்று பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்தவராவார்.

இந்நிலையில் மாணவின் திடீர் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed