• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் இளைஞனிடம் 15 லட்சம் ஏமாற்றிய ஒருவர் கைது.

Okt 8, 2024

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் 15 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹமாஸ் புதிய தலைவர் சின்வார் உயிருடன்! கசிந்துள்ள தகவல்

தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி முதல் கட்டமாக 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர், வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காது தன்னை ஏமாற்றி விட்டதாக இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளான்.

பிறந்தநாள் வாழ்த்து. திரு.இ.சக்தி (08.10.2024. சிறுப்பிட்டி)

முறைப்பட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த நபரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சதுர்த்தி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்..

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் முற்படுத்திய போது , இளைஞனிடம் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு தொகையை இன்றைய தினம் மீள கையளிப்பதாகவும் , மிகுதி பணத்தினை மிக விரைவில் மீளளிப்பதாக மன்றில் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து அவரை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed