• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

6 மாவட்டங்களுக்கு தொடரும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Aug 18, 2024

மழையுடனான காலநிலையால் நாடளாவிய ரீதியில் 8522 குடும்பங்களை சேர்ந்த 26,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இலவச உரம் : வெளியான தகவல்

கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற  மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளுக்கு செம்மஞ்சள்  நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (18.08.2024)

இதேவேளை நாட்டைச் சூழவுள்ள  கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ் . சிறைக்கைதி உயிரிழப்பு!!

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணம் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 150 மில்லி மீற்றர் அளவுக்கு மேல் கடுமையான மழை பெய்யக்கூடும்.

நாட்டில் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடனான மழை பெய்யும். 

அத்துடன் வடக்கு மற்றும் வடமேல்  மாகாணங்களில் மணிக்கு 30 – 40 வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed