மூன்றாம் உலக போர் இன்று (05) அல்லது நாளை (06) தொடங்கும் என இந்தியாவின் (India) பிரபல ஜோதிடராக அறியப்படும் குஷால் குமார் (Kushal Kumar) தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
புதுடெல்லி (New Delhi) இந்தியாவின் பிரபல ஜோதிடராக அறியப்படுபடும் குஷால் குமார், இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படுபவர் அத்தோடு இதற்கு முன் ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) நாடுகளுக்கு இடையேயான போரை கணித்தவர்.
இந்தநிலையில், இஸ்ரேல் (Israel) மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்புக்கு இடையேயான போரையும் முன்கூட்டியே அறிவித்த இவர் இந்த போர்களால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு மற்றும் உணவு தட்டுப்பாடு போன்ற நிகழ்வுகள் ஏற்படமெனவும் குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகம் மீண்டு வந்த சூழலில் இந்த போர்கள், ஆபிரிக்கா (Africa) போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டன.
இந்த நிலையில், மூன்றாம் போர் தொடக்கம் பற்றிய திகதியை குஷால் அறிவித்து உள்ள நிலையில் அவருடைய கணிப்பின்படி, இந்த போர் இன்று அல்லது நாளை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இஸ்ரேல் மீது போரை தொடுக்க ஈரான் (Iran) தலைவர் அலி காமினி (Ali Khamenei ) உத்தரவிட்டு சில தினங்கள் ஆன நிலையில், பிரபல ஜோதிடரின் மூன்றாம் உலக போர் பற்றிய அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
- ஜேர்மனியில் கணவன்!! 29 வயது இளம் குடும்பப் பெண் யாழில் பலி?
- யாழில் பரிதாபமாக உயிரிழந்த ஆண் குழந்தை!
- இன்றைய ராசிபலன்கள் 19.09.2024
- சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்க்கப்பட்ட யாழ் இளம் குடும்பஸ்தர்