• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தனிமையில் இருந்த பெண் மீது தாக்குதல் நடாத்தி கொள்ளை!

Aug 2, 2024

யாழ். வடமராட்சி பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தியதுடன் அவரது காதிலிருந்த தோடு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றதுடன் அவர்களது காணிகளின் உறுதிப் பத்திரங்களையும் தீயிட்டுக் கொழுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (02.08.2024)

இச்சம்பவம் நேற்றைய தினம் (01-08-2024) அதிகாலை வடமராட்சி கிழக்கு குடத்தனை மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

லெபனானுக்கு செல்ல வேண்டாம்; இலங்கையர்களுக்கு அறிவுறுத்து

அதிகாலையில் வீட்டில் தனிமையில் உறங்கிகொண்டிருந்தவேளை கதவை உடைத்து முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த இனந்தெரியாத நபர்கள் 68 வயதுடைய வயோதிப் பெண்மீது தாக்குதல் நடாத்தி காரிலிருந்த தங்க தோடு, தாலி ஆகியவற்றையும் கொள்ளையிட்டதுடன் அவரிடம் இருந்த 10,000 ரூபா பணத்தையும் பறித்தெடுத்ததுடன் அவர்களது காணிகளின் உறுதி பத்திரங்களையும் கோரியுள்ளனர்.

யாழில் பேருந்தில் வெளிநாட்டவர்களின் நகைகள் திருட்டு

குறிப்பாக சமீபத்தில் கொள்வனவு செய்த காணியின் உறுதிப் பத்திரத்தையும் கோரியுள்ளனர்

அப்போது அச்சத்தில் வயோதிப பெண் உறுதிப் பத்திரத்தை காண்பிக்க அதனை தீயிட்டு கொழுத்தியதுடன் அவரது பாவனை உடுபுடவைகளையும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த முதிய பெண்மணி சமீபத்தில் கொள்வனவு செய்த காணியில் புதிதாக வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் இடம் பெறுவதாகவும், அதற்கான பணம் எங்கே இருக்கிறது என்றும் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதற்கு அவர் இருந்த காசில்தான் கற்களை பறித்து வேலை செய்யத்தொடங்கியுள்ளோம் என்றும் கூற பொய் சொல்வதாக கூறி தாக்கியுள்ளனர்.

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed