• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் தவறான முடிவெடுத்த இளைஞன்

Mai 3, 2024

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (03) அதிகாலை 12.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல்.

இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கனடாவில் இரு தமிழர்கள் கைது?

குறித்த இளைஞன் மேற்படி விலாசத்தில் உள்ள அவரது காதலியின் வீட்டுக்கு சென்று அங்கு உறங்கியதாகவும் பின்னர் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக இளைஞனின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இன்று முதல் குறைக்கப்படும் சமையல் எரிவாயு விலை!

அந்தவகையில் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed