• Mo.. März 24th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மகனுடன் முரண்பாடு: யாழில் தாய் எடுத்த விபரீத முடிவு..!

März 22, 2025

மகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வயோதிப தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் கோப்பாய் தெற்கு பகுதியில் வசிக்கும் 82வயதான 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவன் இறந்த பின்னர் குறித்த வயோதிப பெண்  தனியாக வசித்து வந்துள்ளார். 

மகன் ஒருவர் தினமும் மாலை வேளை தாயின் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு காலையில் தனது வீடு செல்வது வழமை. 

இந்நிலையில் நேற்றுமுன்தினம்(20) அந்த மகனுக்கும் குறித்த வயோதிப பெண்ணுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் மகன் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் மனவிரக்தியடைந்த குறித்த பெண் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ மூட்டியுள்ளார். 

பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed