• Mi.. März 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

März 18, 2025

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக சிக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உட்பட 4 வீரர்கள் இன்று விண்வெளியில் இருந்து பூமிக்கு புறப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

அதன்படி சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாகப் பிரிந்து, பூமியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் 9 விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் பூமியை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளனர்.

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பிரிந்துள்ள டிராகன் விண்கலமானது இலங்கை நேரப்படி நாளை (19) அதிகாலை 3.27 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடாவில் தரையிறங்கவுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed