• Mo.. März 17th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

க.பொ. த பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

März 17, 2025

நாடளாவியரீதியில் 2024 கல்வியாண்டுக்கான  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (17) ஆரம்பமாகியது.

இந்த பரீட்சைகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை 3,663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோன்றுகின்றனர்.

ஆலயங்களில் வழிபட்ட பின்னர் மாணவர்கள் பரீட்சை மண்டபங்களுக்குச் சென்றதை அவதானிக்க முடிந்தது. பரீட்சை நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பெற்றோரிடம் ஆசிர்வாதங்களைப்பெற்று மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைந்ததை காணமுடிந்தது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed