நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதே வேளை இந்த மின் துண்டிப்புக்கு சதித் திட்டங்கள் ஏதாவது இருக்கின்றதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. இன்று மாலைக்குள் மின்சாரம் வழமைக்கு வந்துவிடும் என நம்புவதாக மின்சாரசபை தரப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.