யாழில் வயோதிப பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில், பார்வைக் குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று(03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.
யாழ் குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த 80 வயதான என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் எனவும் கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியில் இருந்த அவர், வீட்டு கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இதனையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.