• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

Nov. 30, 2024

வவுனியா வைத்தியசாலையில் முதன்முறையாக நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுவிசில் 16 வயது வரை சமூக ஊடகங்களுக்குத் தடை?

பதவியாவைச்சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று(29.11.2024) இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிற்கு  அறுவைச்சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.

யாழ் வைத்தியசாலையில் துயர சம்பவம் – இளம் தாய் மரணம்

மேற்படி, தாயார் மகப்பேற்று வைத்தியநிபுணர் காமினியினால் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்துள்ளதுடன் வைத்தியர் திலீபனினால் நேற்று(29) குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பிரசவத்தின் பிறகு தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பிரசவிக்கப்பட்ட நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed