• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டுநாயக்காவில் இந்திய பிரஜை கைது

Okt 18, 2024

ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை நாட்டிற்கு கடத்த முற்பட்ட இந்திய(india) பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)வைத்து அதிகாரிகளால் இன்று(17) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து. மிஞ்சயன் சர்வின்  (18.10.2024, கனடா)

சந்தேக நபர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ்(sri lankan air lines) விமானமான UL-315 இல் காலை 5:00 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் வசம் இருந்த ஐஸ் போதைப்பொருள் பெறுமதி ரூ. 25 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய இராசிபலன்கள் (18.10.2024)

சந்தேக நபர் இந்தியாவில் உள்ள வர்த்தகர் என சுங்க விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது பொதியில் புடவையால் சுற்றப்பட்டிருந்த ஐஸ் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபரை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் இந்த ஐஸ் பொதியுடன் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed