• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் காணி விற்ற பணம் கொள்ளை – அதிரடி கைது

Okt 3, 2024

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தனது காணியை விற்றுவிட்டு பணத்தினை எடுத்துச் சென்றவேளை, அவரிடம் இருந்து கொள்ளையர்கள் அந்த பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கனடாவில் யாழ்ப்பாண தமிழ்ப் பெண் குத்திக் கொலை 

இந்தச் சம்பவம் நேற்று (02.10.2024) பிற்பகல் 7 மணி அளவில் யாழ்ப்பாணம் (jaffna) – சண்டிலிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஈரான் தாக்குதல்; இலங்கை – இஸ்ரேல் அனைத்து விமான சேவைகளும் இரத்து

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரை கோப்பாய் காவல்துறை பொறுப்பதிகாரியின் கீழுள்ள காவல்துறையினர் குழுவினர் ஊரெழுப் பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கல்வி, செல்வம், வீரம் தரும் நவராத்திரி விழா இன்று ஆரம்பம்!

காணியை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையின் 1 கோடியே 3 இலட்சம் ரூபாய் பணம் I iPhone 14 PROMAX கைத்தொலைபேசி, மற்றும் கடவுச்சீட்டு என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து இந்த துணிகர சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.

பணத்தைப் பறி கொடுத்தவர் சேந்தாங்குளம் பகுதியில் காணியை விற்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed