• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் தவறி விழுந்து மரணம்

Sep 2, 2024

யாழ் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் இன்று

சம்பவத்தில் யாழ் செம்பியன்பற்று வடக்கு பகுதியை சேர்ந்த 63 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.நேற்று (01) காலை தேவாலயத்துக்கு சென்று விட்டு மகனுடன் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து தலையில் படுகாயமடைந்துள்ளார்.

நல்லூர் கந்தனின் தீர்த்தோற்சம்பம் இன்று

இதனையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணை!

மேலும் பெண்ணின் மரணம் தொடர்பில் இன்று (02) பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed