• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு தீ வைப்பு.

Aug 22, 2024

யாழில் இராணுவ முகாமிற்கு முன்பாக காணப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பனை மரங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இன்றைய இராசிபலன்கள் (22.08.2024)

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் (jaffna) – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் அமைந்திருக்கும் 552 ஆவது இராணுவ படை முகாமிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

யாழில் பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்ட வீட்டு கூரைகள்!

மூன்றாவது முறையாக இந்த பனைகளுக்கு தீ மூட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு தீ வைப்பு...! பொதுமக்கள் கடும் விசனம் | Army Troops Burned Hundreds Palm Trees In Jaffna

பயன்தரும் மரங்களாக காணப்பட்ட இந்த பனை மரங்களில் இருந்து வருடாவருடம் அதிகளவான பனம் விதைகளை மக்கள் பெற்று பயன்பெற்றுவந்த நிலையில் இவ்வாறு தீ மூட்டி அழிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பயன்தரு மரங்களை தீ வைக்கும் சம்பவங்கள் வடமராட்சி கிழக்கில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.

எனினும் குறித்த விடயம் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதில் அரச அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் காணப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed