• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அலுவலகம் புதிய இடத்தில்

Aug 16, 2024

வவுனியா மன்னர் வீதியில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகமானது இன்று புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ரஸ்யாவிற்குள் உக்ரைனின் இராணுவ அலுவலகம்!

இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் டிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகம் இயங்கி வந்தது.

நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு.

இந் நிலையில் இடவசதி மற்றும் பொதுமக்களின் வசதி கருதி குறித்த இடத்தில் தொடர்ச்சியாக அலுவலகத்தை நடத்த முடியாத காரணத்தினால் மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான மன்னார் வீதியில் அமைந்துள்ள கட்டடத்தில் இன்றைய தினம் அலுவலகம் புதிதாக திறந்து வைக்கப்பட்டது.

திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம் !

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிடிய மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ சரத் சந்திர தலைமையில் குறித்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 24 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட குறித்த கட்டடமானது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய அலுவலகமாக இன்று முதல் செயற்பட உள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed