• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஏழாலை பகுதியில் வாள்கள், முக மூடிகள் மீட்பு.

Aug 6, 2024

யாழில் குற்றச்செயலினை மேற்கொள்வதற்காக பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாள்கள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன நேற்று திங்கட்கிழமை (05) மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,ஏழாலை மேற்கு , ஏழாலை, புளியங்கிணற்றடி என்ற இடத்தில் உள்ள பற்றைக்குள் இருந்தே மேற்குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சிங்கள பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed