• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் சுன்னாகம் விபத்தில் பறிபோன பெண் ஒருவர் உயிரிழப்பு.

Aug 3, 2024

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் , ஹையேஸ் வாகனம் ஒன்று, வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம்.

இச் சம்பவம் விபத்து இன்று (3) இடம்பெற்றுள்ளது

மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற இரண்டு பெண்கள் தமது பக்கத்தினால் சென்றுகொண்டிருந்தவேளை, அவர்களை முந்திச் செல்ல முயன்ற ஹையேஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் இருவரும் காயமடைந்தனர்.

காயமடைந்த பெண்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த மட்டு. மாமாங்கேஸ்வரர்!

சம்பவத்தில் சங்கானையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆனந்தன் சிவானந்தகௌரி என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed