• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நிலச்சரிவு நிவாரண பணிக்கு 3 நாளில் இந்திய ராணுவம் கட்டிய பாலம்.

Aug 2, 2024

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக இந்திய ராணுவம் மூன்றே நாளில் பாலம் கட்டி சாதனை செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


லெபனானுக்கு செல்ல வேண்டாம்; இலங்கையர்களுக்கு அறிவுறுத்து

கடந்த சில நாட்களுக்கு முன்னால் வயநாடு பகுதிகளில் உள்ள மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர் என்றும் இன்னும் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்பு பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது என்பதும் தெரிந்தது.


பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை.

இந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதற்கு பாதை இல்லாததால் இந்திய ராணுவம் 20 டன் எடை கொண்ட பாலத்தை கட்டியுள்ளது. இந்த பாலம் 90 டன் எடையுள்ள எடையை தாங்கக்கூடியது என்றும் இந்த பெய்லி பாலத்தினை மூன்றே நாட்களில் கன மழையிலும் போராடி கட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழில் தனிமையில் இருந்த பெண் மீது தாக்குதல் நடாத்தி கொள்ளை!

190 அடி நீளம் உள்ள இந்த பெய்லி பாலத்தை கட்டும் பணியை நேற்று மாலை இந்திய ராணுவம் முடித்த நிலையில் இந்த பாலத்தின் வழியாக மீட்பு குழுவினர் சென்று மீட்பு பணியை செய்து வருகின்றனர். 350 பேர் கொண்ட இந்திய ராணுவத்தினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளுக்காக இந்த பாலத்தை கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed