• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பலரை இலக்கு வைத்து பண மோசடி!

Jul 27, 2024

யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர்களை இலக்கு வைத்து பாரிய பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு !

யாழ் மாவட்டத்தின் சில பகுதியிலுள்ள வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் ஊடாக இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பண மோசடி
இலங்கை தொலைத்தொடர்பு நிறுவகத்தில் இருந்து அழைப்பை ஏற்படுத்துவதாக தம்மை அடையாளப்படுத்தும் மோசடியாளர்கள், நீங்கள் உங்களது தொலைபேசி கட்டணங்களை சிறந்த முறையில் செலுத்துவதன் காரணத்தால் உங்களுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது.

அதற்காக உங்கள் அடையாள அட்டை இல, வங்கிக் கணக்கு இலக்கம் என்பனவற்றினை தருமாறும் கோருகின்றனர்.

இத்தரவுகள் வர்த்தகர்களினால் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் ஓர் OTP இலக்கம் வங்கியின் பெயரிலேயே அனுப்பப்படுவதாகும் சிலருக்கு வங்கிக்கு பணம் அனுப்பியது போன்று வங்கியின் பிரத்தியேக செயலிக்கே தரவுகள் அனுப்பப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.


 கடவுச்சீட்டுக்கு காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

மர்மநபர்கள்
இதன்பின் மீள் அழைப்பெடுக்கும் மர்மநபர்கள் அவ் குறித்த இலக்கங்களினை கோருவதாக சுட்டிக்காட்டிய வர்த்தகர்கள் தாம் சந்தேகமடைந்து அந்த இலக்கத்தை மீளத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான மோசடியால் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அறிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் ஆண்டுக்கு 1000 பேர் வரை உயிரிழப்பு! 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed