• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் ஆண்டுக்கு 1000 பேர் வரை உயிரிழப்பு!

Jul 27, 2024

மனிதர்களின் உடலில் விஷம் கலப்பதனால் இலங்கையில் ஆண்டுக்கு சுமார் 1000 பேர் வரை உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ் விடயத்தை தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர் ரவி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் உடலில் விஷம் கலந்ததன் காரணமாக வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்படுபவர்களைக் காப்பாற்ற வைத்தியர்கள் முயற்சிக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், உடலில் கலந்த விஷம் என்னவென்பது குறித்து அறியாததன் காரணமாக அவர்களுக்குரிய சிகிச்சைகளை உடனடியாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதன் காரணமாக அவர்கள் உயிரிழப்பதாக விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed