• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் பட்டப்படிப்பை மேற்கொண்ட இலங்கை மாணவிக்கு நேர்ந்த துயரம்

Jul 25, 2024

கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் பயின்று வந்த இலங்கை மாணவி கடுமையான புற்றுநோயுடன் போராடிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

குருநாகல் தொரட்டியாவ, மல்லவபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய டபிள்யூ.எம். மாஷா விஜேசிங்க என்ற திருமணமான பட்டதாரி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த அவர், கடுமையான வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

யாழ். வீடொன்றில் இருந்து வீசிய துர்நாற்றம்.உயிரிழந்த நபர்

புற்று நோய்
இந்த நிலையில் இந்த மாணவி தனது கணவருடன் இலங்கைக்கு வந்து புற்று நோய்க்கு இலங்கையில் சிகிச்சை பெற்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் பேராதனை பல்கலைகழகத்தின் பட்டதாரி மாணவியும் அதே சமயம் பேராதனை பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

தவறான முடிவெடுத்த பல்கலைக்கழக மாணவன் –

மேலதிக கல்விக்காக கனடா சென்றதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed