யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடலில் புதன்கிழமை (17.07.2024) பெண்ணொருவர் குழந்தை பிரசவித்துள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து , அம்புலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இன்றைய இராசிபலன்கள் (19.07.2024)
படகில் மருத்துவ அதிகாரி, மருத்துவ மாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிகாட்டுவான் இறங்கு துறை நோக்கி அழைத்து வந்துள்ளனர்.
அதன்போது அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார்.
யாழில் கிளுவை முள்ளு குத்தியதில் மூதாட்டி உயிரிழப்பு.
தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிகாட்டுவான் அழைத்து வந்து, அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளார் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.
தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
- ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவுசீட்டு பரிசோதனை நடைமுறை
- கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் .
- வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா. பருத்தித்துறை பொலிஸார் அதிரடி நடவடிக்கை
- புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு
- தொலைபேசியில் கேம் விளையாட மறுத்த அப்பா !! 13 வயது மாணவன் தற்கொலை!