• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மருத்துவமனையில் சிகிச்சை மறுப்பு; 2 மாத குழந்தை உயிரிழப்பு

Jul 4, 2024

மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை மறுக்கப்பட நிலையில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

2 மாத குழந்தை பால் குடிக்கும் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த வைத்தியசாலை குழந்தைக்கு சிகிச்சை வழங்க மறுத்ததை அடுத்து, குழந்தை வேறு ஒரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளது.

சம்பவத்தில் மாத்தறை கம்புருகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 2 மாதம் 27 நாட்களை உடைய இரட்டைக் குழந்தைகளில் மூத்த குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு நேற்று (03) காலை பால் கொடுக்கப்பட்ட போது பால் இறுகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோர் உடனடியாக குழந்தையை முச்சக்கர வண்டியில் மாத்தறை மாவட்ட புதிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படவில்லை என பணியாளர்கள் கூறியதை அடுத்து, குழந்தையை அம்பியூலன்சில் வேறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு பெற்றோர் கேட்ட நிலையில், அதற்கும் வைத்தியசாலை பாதுகாப்புப் பணியாளர்கள் மறுத்துள்ளனர்.

பின்னர் சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் பயணித்து குழந்தையை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது குழந்தை இறந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் 30 நிமிடங்களுக்கு முன்னதாக அழைத்து வந்திருந்தால் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed