• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண தமிழன்

Jun 13, 2024

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் வசித்து வரும் 60 வயதான செல்லையா திருச்செல்வம் தனது தாடியில் 1,700 kg எடையினை கட்டி இழுத்து உலகசாதனை படைத்துள்ளார்.

தன்னுடைய கடைசிப் படத்தை தானே தயாரிக்கிறாரா விஜய்?

தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் வைத்து, டாடா ஏசி ஊர்தியில் அதன் ஓட்டுநர், அறிவிப்பாளர் மற்றும் இருவர் என நான்கு பேரை வைத்து, 1,700 kg எடையினை கொண்ட( TATA) ஊர்தியை தனது தாடியில் கட்டி 510 மீட்டர் தூரம் கட்டியிழுத்து செல்லையா திருச்செல்வம், சோழன் உலக சாதனை படைத்தார்.

யாழில் வீடு புகுந்து பட்டப்பகலில் நடந்த திருட்டு.

ஏற்கனவே இவர்  இலங்கையில் வைத்து 4 உலக சாதனைகள் படைத்துள்ளார். இந்த உலக சாதனை நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்தது.

பிறந்தநாள் வாழ்த்து. ச.கெங்காதரன் (கெங்கா) (13.06.2024, சுவிஸ்)

சோழன் உலக சாதனை படைத்த திருச்செல்வத்திற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், பதக்கம், அடையாள அட்டை போன்றவை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் அவர்களால் வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்வின் இறுதியில் உலக சாதனை படைத்த செல்லையா திருச்செல்வம் அவர்களை அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed