• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெள்ளம் பார்க்க படகில் சென்றவர்களை பதம் பார்த்த மின்சாரம்! ஒருவர் உயிரிழப்பு

Jun 4, 2024

வெள்ளத்தை பார்ப்பதற்காக படகு ஒன்றில் 20 பேர் கொண்ட குழு ஒன்று சென்ற போது குறித்த படகு உயர் மின்கம்பியில் மோதி மின்சாரம் தாக்கியதில்,ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனையோர் உயிர் தப்பியுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 33 தேர்தல் அதிகாரிகள் உயிரிழப்பு

புலத்சிங்கள –  திவலகட பிரதேசத்தைச் சேர்ந்த லொகு சின்ஹாரச்சிகே தமித் குமார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அந்த இளைஞன் சுமார் இருபது பேர் கொண்ட குழுவுடன் நேற்று (03) மாலை வெள்ளத்தைப் பார்ப்பதற்காக படகில் சென்றுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து. சிந்திகா தங்கராஜா (04.06.2024, பிரான்ஸ்)

குறித்த குழுவினர் பயணித்த படகை உயிரிழந்த இளைஞன் ஓட்டிச் சென்றதுடன், துடுப்பை ஏந்திய போது, உயர்நிலை மின்கம்பியில் மோதி வெள்ளத்தில் விழுந்துள்ளார்.

டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி! பரிசு தொகை அறிவிப்பு!

படகில் இருந்தவர்களும் மின்சாரம் தாக்கி படகிற்குள் விழுந்ததாகவும், 

ஆனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென்றும் பொலிஸார்  தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed