• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

Jun 3, 2024

குருநாகலில் (Kurunegala) உயர்தரப் பரீட்சையில் (G.C.E A/L Exam) பல்கலைக்கழக அனுமதிக்கு போதுமான பெறுபேறுகள் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

அச்சுவேலியில் வீடு ஒன்றின் மீது பொற்றோல் குண்டு தாக்குதல்!

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் வெளியான பெறுபேறுகளைப் பெற்ற மாணவனே தவறான முடிவை எடுத்துள்ளார்.

விபரீத முடிவு

சுவிற்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் ரயிலில் மோதுண்டு மரணம்!!
குறித்த மாணவன் 2022 ஆம் ஆண்டு முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், பல்கலைக்கழக அனுமதி பெறாத காரணத்தினால் கடந்த வருடம் இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்பகுதியில் பேரவலம்! வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்கள் : அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

இந்த நிலையில் மாணவனுக்கு ஒரு திறமைச் சித்தி (C) மற்றும் இரண்டு சாதாரண சித்திகள் (S) கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் சீரற்ற காலநிலை – 24 மணியாத்துள் 10 இறப்புகள் 5 காணமல் போதல்

பரீட்சைப் பெறுபேற்றினை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed