• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குருணாகலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகொலை!

Mai 19, 2024

குருணாகலில் (Kurunegala) ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இக் கொடூர சம்பவம் குருணாகல் – மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மனிதர்கள் மரணத்தை தாண்டி வாழ முடியும் சீன விஞ்ஞானிள்.

இந்தக் கொலைகளை 42 வயதுடைய ஒருவரே செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

மே 18 ! முள்ளிவாய்க்கால் நினைவு நாள். (2024) – 
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை மிதிவண்டியில் பயணித்த நபரை சோதனையிட்ட காவல்துறையினர், அவரிடம் இருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றியுள்ளனர்.

யாழில் கொத்து றொட்டியில் உரோமம்?ஹோட்டலுக்கு சீல்.

இதனடிப்படையில் சந்தேகநபரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்த கடிதங்களை பரிசோதித்த போது ​​கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பிறந்தநாள் வாழ்த்து. மயூரன் சுசி (18.05.2024, சிறுப்பிட்டி )

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed