• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். ஏழாலை பகுதியில் தவறான முடிவெடுத்த முதியவர் ஒருவர்

Mai 16, 2024

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை!

இச்சம்பவத்தில் ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஐயாத்துரை தியாகராஜா என்ற முதியவரே இவ்வாறு இன்றையதினம் (6-05-2024) உயிரிழந்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தீபன் கயானா. (16.05.2024, சிறுப்பிட்டி)

குறித்த முதியவரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில் குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து சாரதி!

இந்த நிலையில் மன விரக்தியடைந்த அவர் இன்று அவரது வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

இந்த காட்சி அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

விமான தபால் சேவை மூலம் அனுப்பப்பட்ட பெறுமதியான போதைப்பொருட்கள்!

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed