• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்து! மூவர் உயிரிழப்பு!

Sep 5, 2023

பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குவாடரில் சீ கிங் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.

இதன்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் மீண்டும் தரைக்கு திரும்பும் போது தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 2 பேர் அதிகாரிகள் எனவும் ஒருவர் பணியாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவருமான ஷெபாஸ் ஷெரீப், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed