• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு

Dez. 19, 2022

யாழ் – ஊர்காவல்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 3 1/2 பவுண் தங்கநகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது.

இன்றையதினம் (19) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வீட்டில் தனியாக வசித்துவந்து 72 வயதுடைய மூதாட்டி சமுர்த்திக் கொடுப்பனவை பெறுவதற்காக இன்றையதினம் பிரதேச செயலகத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்குச் சென்ற திருடர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்று அலுமாரிக்குள் இருந்த உள் கதவு திறப்பினை எடுத்து கதவினை திறந்து இவ்வாறு நகைகளையும் பணத்தையும் களவாடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை காவல் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி காவலரணில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed