• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோண்டாவில் பகுதியில் கிராம சேவகர் என்று கூறி சங்கிலி பறித்து சென்ற நபர்

Dez 3, 2022

கிராம சேவகர் என்று பொய்யாகக் கூறிக்கொண்டு வயோதிபப் பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு கோண்டா மேற்குப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 75 வயது மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கிராம அதிகாரி என போலியாக அடையாளம் காட்டியுள்ளார்.

உங்களுக்கு ரூ.70,000 கல்வி உதவித்தொகை கிடைத்திருப்பதாகவும், உடனே என்னுடன் வாருங்கள் என்றும் அந்த நபர் போன் செய்துள்ளார். அதனை உண்மையென நம்பி வயோதிபர் சென்றுள்ள நிலையில், நந்தாவில் பகுதியில் 2 பவுன் செயினை அறுத்துக்கொண்டு நபர் தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed