• Mo.. Apr. 7th, 2025 5:12:21 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிகரிக்கப்பட்டுள்ள மின்வெட்டு நேரம்: வெளியானது புதிய அறிவிப்பு !

Nov. 21, 2022

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம்(21.11.2022) இரண்டு மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த தினங்களில் ஒரு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed